Tuesday, August 17, 2010

எங்கேயோ படித்தது

"நான் சந்திரனை காதலித்து இருந்தால்,
என்னை இன்று கவிஞனாக ஆக்கி இருப்பார்கள்.
உன்னை காதலித்ததால் இன்று என்னை பைத்தியகாரனாக ஆக்கி விட்டார்கள்"

"காதலி
என்னதான் என்னை மறந்தாலும்
என்னை பிரிந்தாலும் என்றாவது
என்னை நினைக்கும் போது கண்களில்
வருவேன் கண்ணீராக..."

"உன் பின்னால் திரும்பி பார்
என் நினைவுகள் எல்லாம் நிழலாக
தொடர்கிறது."

"மரணம் எல்லோருக்கும் ஒரு முறைதான் வரும்.
ஆனால் எனக்கோ உன்னை நினைத்து கொண்டிருக்கும் ஒவ்வொரு
நிமிடமும் மரணம் தான்."

"உன்னை என் இதயம் என்று
நான் சொல்ல மாட்டேன்
ஏன் என்றால் நீ துடித்து
நான் வாழ
விருப்பம் இல்லை."

"உன் சத்தம் கேட்டு எழுந்து
பார்த்தேன் நீ இல்லை
பின்புதான் தெரிந்தது அது என்
இதயத்தில் துடிக்கும்
உன் நினைவுகள் என்று. "

"என் உடல் கூட தனியாக
நடக்க ஆரம்மித்து விட்டது
ஆனால்
என் இதயத்தில் மட்டும் அவள்
இன்னும் என் கை கோர்த்து தான்
நடத்து கொண்டு இருக்கிறாள்
"என் காதலியாக" "

"என் இதயம்
என்ன
கிழிந்த காகிதமா
இப்படி கிறுக்குகிறாய்
உன் நினைவுகளால்"

"பக்கம் பக்கமாய் பேச நினைக்கிறேன்.
ஆனாலும் அவள் பக்கத்தில் வரும்பொழுது
முந்திக் கொள்கிறது மௌனம்."

"மீன்னுக்கு தண்ணீர் மீது காதல்
கடிகாரத்துக்கு காலம் மீது காதல்
கவிஞருக்கு கவிதை மீது காதல்
ஒவியருக்கு ஒவியம் மீது காதல்
சிற்பிக்கு சிலை மீது காதல்
எனக்கு உன் மீது
என்றென்றும் காதல்"

"எல்லோரும் காதலை
சொல்ல ரோஜாவை
தான் தேர்ந்தெடுப்பார்கள்
ஆனால் நான் தவிர்கிறேன்
ரோஜாவில் உள்ள முள்
உன் மென்மையான
கைகளை குத்திவிடும்
அதை என்னால் தாங்கமுடியாது! "

"நீ
என் கனவுகளில்
தொடர்ந்து
வருவதாக உறுதி கொடுத்தால்....
நான் இனி
உறங்கினால்
கண் விழிக்கவே மாட்டேன்...! "

"நான் முத்தங்களுக்காக ஏங்குபவன் அல்ல..
இருந்தாலும்
உன் எதிர் வீட்டு குழந்தையை
கொஞ்சி அளவில்லாமல்
முத்தமிடும் போதெல்லாம்...
நானும் அந்த குழந்தையாக....!? ..! " 


1 comment:

  1. Nice post.
    //மரணம் எல்லோருக்கும் ஒரு முறைதான் வரும்//
    Why so much of philosophical expressions!
    Anyhow it's good to read.
    Keep going...

    ReplyDelete