Thursday, August 12, 2010

காதல் ரோஜாவே

1992 இல் மணிரத்தினம் இயக்கத்தில் அரவிந்தசாமீ மற்றும் மதுபாலா நடிப்பில் வெளிவந்த படம் ரோஜா. வெற்றி படமான இப் படத்துக்கு முதன்முதலாக A. R. ரஹ்மான் இசை அமைத்து இருந்தார். பல ஹிட் படல்களை கொண்ட இப் படத்தில் இடம் பெற்ற காதல் ரோஜாவே பாடலை தமிழ் ரசிகர்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள்.  


காதல்  ரோஜாவே  எங்கே  நீ  எங்கே 
கண்ணீர்  வழியுதடி  கண்ணே 
கண்ணுக்குள்  நீதான்  கண்ணீரில்  நீதான் 
கண்மூடிப்  பார்த்தால்  நெஞ்சுக்குள்  நீதான் 
என்னானதோ  ஏதானதோ  சொல்  சொல் 

(காதல்)

தென்றல்  என்னைத்  தீண்டினால்  சேலை  தீண்டும்  ஞாபகம்
சின்னப்  பூக்கள்  பார்க்கையில்  தேகம்  பார்த்த  ஞாபகம்
வெள்ளி  ஓடை  பேசினால்  சொன்ன  வார்த்தை  ஞாபகம்
தேகம்  ரெண்டும்  சேர்கையில்  மோகம்  கொண்ட  ஞாபகம்
வாயில்லாமல்  போனால்  வார்த்தை  இல்லை  கண்ணே
நீயில்லாமல்  போனால்  வாழ்க்கை  இல்லை  கண்ணே
முள்ளோடுதான்  முத்தங்களா  சொல்  சொல் 

(காதல்)

வீசுகின்ற  தென்றலே  வேலை  இல்லை  இன்று  போ
பேசுகின்ற  வெண்ணிலா  பெண்மை  இல்லை  ஓய்ந்து  போ 
பூ  வளர்த்த  தோட்டமே  கூந்தல்  இல்லை  தேய்ந்து  போ
பூமி  பார்க்கும்  வானமே  புள்ளியாகத்  தேய்ந்து  போ
பாவை  இல்லை  பாவை  தேவை  என்ன  தேவை
ஜீவன்  போன  பின்னே  சேவை  என்ன  சேவை
முள்ளோடுதான்  முத்தங்களா  சொல்  சொல் 


(காதல்)

No comments:

Post a Comment